April 13, 2014

நெடுங்கேணியில் தெய்வீகனும் உயிரிழப்பு : சிங்களப்படைத்தரப்பு உத்தியோகபூர்வ அறிவிப்பு !

நெடுங்கேணியில் நேற்று நடந்த மோதலில்கொல்லப்பட்டதாக சிறிலங்காப் படையினரால்அறிவிக்கப்பட்ட மூன்று பேரில்,தெய்வீகன் என்பவர்

,

விடுதலைப் புலிகளின்வான்புலிகள்அமைப்பின்முக்கியமான விமானிஎன்று சிறிலங்காஇராணுவப் பேச்சாளர்பிரிகேடியர் ருவான்வணிகசூரியதெரிவித்துள்ளார்.
நெடுங்கேணிக்குத் தெற்கே சுமார் 15 கி.மீ தொலைவில்உள்ள வெடிவைத்தகல்லு என்ற இடத்தில், நேற்றுஅதிகாலையில். நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீள உயிர்கொடுக்க
 முனைந்தவர்கள் என்று கூறி, கோபி, அப்பன்,தெய்வீகன்  ஆகிய மூவரையும் சிறிலங்காப் படையினர்சுட்டுக் கொன்றனர்.
இவர்கள் மூவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில்முன்னர் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இவர்களில் வான்புலிகளின் விமானியானதெய்வீகன் , 2007ம்ஆண்டு நடத்தப்பட்ட அனுராதபுர வான்படைத்தளம் மற்றும்கொலன்னாவ எண்ணெய்க் குதம் என்பனவற்றின் மீதானவான் தாக்குதல்களில் 
பங்கெடுத்தவர் என்று சிறிலங்காபாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் 
பிரிகேடியர் ருவான்வணிகசூரிய தெரிவித்தார்.
1995ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொண்ட ராதா படையணியைச் சேர்ந்த கரும்புலியான தெய்வீகன் , விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின்குடும்பத்தினரின் பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும்இருந்தவர்.
போரின் முடிவில் இந்தியாவுக்குத் தப்பிச்சென்ற இவர்,பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் சென்றதாகவும்,அங்கிருந்து அண்மையில் சிறிலங்காதிரும்பியிருந்ததாகவும் பிரிகேடியர் ருவான் வணிகசூரியதெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஏனைய இருவரான கோபி,மற்றும் அப்பன் ஆகியோர் விடுதலைப் புலிகளின்புலனாய்வுப் பிரிவில் இருந்தவர்கள் என்றும் அவர்குறிப்பிட்டார்.
கோபி போரின் முடிவில் சிறிலங்காப் படையினரால் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர், சவூதிஅரேபியாவுக்குச் சென்று 
சாரதியாகப் பணியாற்றியவர்என்றும், அங்கிருந்த ஐரோப்பிய நாடுகளுக்குச் 
சென்றுதிரும்பியவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேற்றைய தேடுதல் நடவடிக்கைக்காக சுமார் 2000சிறிலங்காப் படையினர் நெடுங்கேணிக்குத் தெற்கிலுள்ளகாட்டுப் பகுதியில் குவிக்கப்பட்டதாக
 செய்திகள்தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment