November 2, 2014

3,000-க்கு அதிகமான ஈழத்தமிழர்கள் பிரித்தானியாவில் தலைமறைவாக வாழ்கின்றனர் – ஆங்கில ஊடகம்!

3000-க்கும் அதிகமான ஈழத்தவர்கள் பிரித்தானியாவில் தலைமறைவாக வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவின் குடிவரவு திணைக்களத்தின் அறிக்கை
ஒன்றை மேற்கோள்காட்டி இன்றைய ஆங்கில பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் மாணவர் வீசாக்களில் பிரித்தானியாவுக்கு பிரவேசித்த 50000 க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் வீசா காலம் நிறைவடைந்த பின்னரும் நாட்டில் இருந்து வெளியேறவில்லை.

அவர்களை குடிவரவு திணைக்களத்தின் பிடியில் இருந்து தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறானவர்களில் 3000 ஈழத் தமிழர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை கைது செய்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கின்ற போதும், அவர்கள் குறித்த தகவல்கள் எவையும் இல்லாத நிலையில் தேடுதல் பணிகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment