May 26, 2015

வீசா இன்றி இந்தியா செல்ல முடியாது! இந்திய துணைத்தூதுவர் நடராஜன்!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லவுள்ளவர்கள் வீசாவினைப் பெற்றே விமானநிலையத்தினூடாக செல்ல முடியும் என யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு வீசா பெற்றுச் செல்லும் முறைமை தொடர்ந்து வரும் நிலையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஈ.வீசா ( இணைய வீசா) வினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
பலர் ஈ.வீசா என்றால் வீசா இல்லாது இந்தியாவுக்குச் செல்ல முடியும் என நம்பி பயணச்சீட்டை பெற்று விமானநிலையத்திற்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
இது தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் கருத்து கூறுகையிலேயே யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment