August 30, 2015

தஞ்சாவூர்-விக்கிரவாண்டி சாலையில் உள்ள “ராஜ ராஜ சோழன்” மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட 1000 வருட பழமையான கோயில் இடிக்கப்பட உள்ளது.!

“கங்கை முதல் கடாரம் வரை வென்று தமிழர்களின் புகழை உலகிற்கு எடுத்துக்காட்டிய ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோயில் இது. இதில் வேடிக்கை என்னவென்றால் ராஜேந்திர சோழன் இளவரசர் பட்டம் ஏற்று
அரியணையில் அமர்ந்து வரும் 2014 ஆம் ஆண்டு சரியாக ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைய உள்ளது, அதற்கு அன்பளிப்பாக தமிழர்கள் அவருக்கு தரும் மிகப் பெரிய பரிசு அவர் கட்டிய கோயிலை இடிப்பதாகவே இருக்கும்!. பத்திற்கும் மேற்பட்ட சோழர்களின் கல்வெட்டுகளை தாங்கி நிற்கும் இந்த கோயிலை இடிக்க விடாமல் காப்பாற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமை. இந்த கோயிலில் ராஜேந்திர சோழன் தன் மனைவிகளுடன் இறைவனை தொழுவதை போன்ற சிற்பம் ஒன்றும் உள்ளது. இது போன்று தன் இன வரலாற்றச் சின்னங்களை அந்த இனமே அழிப்பது போன்ற கொடுமை எந்த நாட்டிலும் நடக்காது.

No comments:

Post a Comment