September 26, 2015

திலீபனின் நினைவு துாபி நல்லுாரில் இருந்த போது (படங்கள் இணைப்பு)

இந்திய அரசுக்கு எதிராக உண்ணாவிர போர் செய்து உயிர் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் நிகழ்வு இன்று தமிழர் தேசம் எங்கும் உணர்வு பூர்மாக நினைவுகூரப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபன் இந்திய அரசுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து. 1987 செப்டம்பர் 15ஆம் திகதி தனது உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்து 1987 செப்டம்பர் 26 அன்று காலை 10.48 மணிக்கு மரணத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது
தீலீபனின் வீடு இருந்த இடம் இது.

நல்லூர் சூழலில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடம் பின்னர் தரைமட்டமாக்கப்பட்டது.  திலீபனின் வீடும் உடைக்கப்பட்டது. அவரது வீடிருந்த தடயமே இல்லாமலாக்கப்பட்டுவிட்டது.
 திலீபனின் நினைவு துாபி நல்லுாரில் இருந்த போது. ஆனால் தற்போ இது அந்த இடத்தில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டது.

No comments:

Post a Comment