July 25, 2016

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்காவின் பிணை கோரிய வழக்கு செம்;டெம்பர் 8 ல் விசாரணைக்கு!

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்காவின்  பிணை கோரி  தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதென  கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.


2012ஆம் ஆண்டு பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன்  தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில்  ; முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்காவின பிணை கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே  கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.


No comments:

Post a Comment