July 25, 2016

யாழ் கொக்குவிலில் கோர விபத்து!

யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் ஏ9 வீதியில் பயணித்த குடும்பத்தினை கொக்காவில் பகுதியில்   எதிரே பயணித்த பேரூந்து மோதியதில் தாயும் , தந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தபோதும் 2 வயது சிறுவன் படுகாயத்துடன் உயிர் தப்பினான்.

குறித்த சம்பவத்தில் றொ.ஜெயக்குமார் வயது 25 , ஜெ.பிரசாந்தி வயது 23 என்னும் குற்செட் வீதி , வவுனியா என்னும் முகவரியை உடைய தாயும் தந்தையே உயிரிழந்தனர்.
இருப்பினும் தாயின் அரவனைப்பில் இருந்த இரண்டு வயதுச் சிறுவன் படுகாயமுற்ற நிலையில் உயிருக்காக போராடிய நிலையில் உள்ளான்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
வவனியாவினை சொந்த இடமாகக் கொண்ட மேற்படி குடும்பம் யாழில். உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
இவ்வாறு பயணித்தவர்கள் யாழிற்கு வந்து மீண்டும் வவுனியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு பயணித்தவர்கள் ஏ9 வீதியில் கொக்காவில் பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்தவேளையில் எதிரே வந்த பேரூந்து ஒன்று மோதியுள்ளது. குறித்த விபத்தின்போது சம்பவ இடத்திலேயே தாய் , தந்தை இருவரது உயிரும் பரிதாப கரமாக பிரிந்த து.
சிறுவன் மட்டும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
உயிரிழந்த இருவரின் உடலங்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேற்படி விபத்து தொடர்பாக மாங்குளம் ஸ்ரீ பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment